சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை

 


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை முதல் மீண்டும் மூடப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதில், பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இதனால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்வரும் 3ம் திகதி முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எவ்வறெனினும் தேவையான மசகு எண்ணெய் கிடைத்ததும், ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீளத்திறக்கப்படுமென பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீளவும் மூடப்பட்டாலும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாதென எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.


இலங்கைக்கு நீண்டகால மசகு எண்ணெய் விநியோக ஒப்பந்தம் சிங்கப்பூர் நிறுவனத்துடன் காணப்படுகிறது. குறித்த நிறுவனம் எதிர்வரும் 26ம் திகதி முதல் மசகு எண்ணெயை விநியோகிக்குமென எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் மேர்பன் ரக மசகு எண்ணெயை கொள்வனவு செய்வதற்காக 90 நாட்களுக்கு முன்னர் உரிய நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும். அவசர கொள்வனவாக மாற்று மசகு எண்ணெயை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையே இதற்கு காரணமாகும். சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நாட்டின் பெற்றோல் தேவையில் 14 வீதமும், டீசல் தேவையில் 29 வீதமும் பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும், நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படாதென எரிசக்தி அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.