காதல் விவகாரத்தால் இளைஞர் கழுத்து வெட்டிப் படுகொலை!!

 


இளைஞர் ஒருவர் கண்ணாடித்துண்டால் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.


கம்பஹா, கடவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனக் கடவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை, கோணஹேன பிரதேசத்தை சேர்ந்த 20 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நுவர வீதி, கடவத்தை பிரதேசத்தச் சேர்ந்த 19 நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காதல் விவகாரமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.