மேல் மாகாணத்தில் ஒமிக்ரோன்!!
இலங்கையில் இரண்டு ஒமிக்ரோன் திரிபுகளின் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றின் அதிக பரவல் மேல் மாகாணத்திலேயே உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது என விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சந்திம ஜீவந்திர நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த தொற்றாளர்கள், கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபான, பாதுக்க, வெல்லம்பிட்டி, கொலன்னாவ, கல்கிஸை, நுகேகொடை, அங்கொடை, பதுளை, காலி மற்றும் ருவன்வெல்ல முதலான பகுதிகளில் பதிவாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை