பலப்பரீட்சையில் வென்றது குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி!!


பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் லாகூர் கலண்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் கலண்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் ஸமான் 70 ஓட்டங்களையும் ஹரி புருக் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், குலாம் முதாசர் 2 விக்கெட்டுகளையும் லுக் வுட் மற்றும் இப்தீகார் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 116 ஓட்டங்களையும் மேம்ஸ் வின்ஸ் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் கலண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹரிஸ் ரவூப், கம்ரன் குலாம் மற்றும் டேவிட் வெய்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 57 பந்துகளில் 8 சிக்ஸர்கள் 11 பவுண்ரிகள் அடங்களாக 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜேஸன் ரோய் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.