பிரான்சில் இடம்பெறும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வுக்கான புலன்மொழித் தேர்வு !

 


தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வின் எழுத்துத் தேர்வு நிறைவடைந்த நிலையில் அதற்கான புலன்மொழி வளத் தேர்வு தற்போது தமிழ்ச் சோலைப் பள்ளிகளில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.


வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 10 வரையான மாணவர்களுக்கு வாசித்தல், பேசுதல், கேட்டல் ஆகிய பிரிவுகளும், வளர்தமிழ் 11 முதல் வளர்தமிழ் 12 வரை பேசுதல், கேட்டல் ஆகிய பிரிவுகளிலும் புலன்மொழி வளத் தேர்வு இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை பாலர் பிரிவுக்கான தமிழ்மொழி அரையாண்டுத் தேர்வு எதிர்வரும் 19.02.2022 நடைபெறும் என்று தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அறிவித்துள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.