சிறப்பாக வெற்றியடைந்தது லாகூர் கலாந்தர்ஸ் அணி!!


பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 9ஆவது லீக் போட்டியில், லாகூர் கலாந்தர்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லாகூர் கலாந்தர்ஸ் அணியும் பெஷாவர் சல்மி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெஷாவர் சல்மி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் கலாந்தர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பகர் சமான் 66 ஓட்டங்களையும் சபீக் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெஷாவர் சல்மி அணியின் பந்துவீச்சில், சல்மான் இர்சாட் 2 விக்கெட்டுகளையும் உஸ்மான் காதீர் மற்றும் டாலட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெஷாவர் சல்மி அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லாகூர் கலாந்தர்ஸ் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹெய்டர் அலி 49 ஓட்டங்களையும் கம்ரான் அக்மல் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

லாகூர் கலாந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில், சமான் கான் 3 விக்கெட்டுகளையும் ஷாயின் அப்ரிடி மற்றும் டேவிட் வெய்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக லாகூர் கலாந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சமான் கான் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.