ஒன்று கூடும் 'உலகத் தமிழ் பாராளுமன்றம்'

 


உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு மற்றும் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் கடந்த 7 ஆண்டுகளாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடத்தி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் சங்கங்கள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், தாய் தமிழகத்திற்கு வந்து தம் உறவுகளை சந்தித்து சமுதாயம் மேம்படுவதற்கான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.


இவ்வாண்டு மார்ச் 11 ஆம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் ஒரு நிகழ்வாக உலகத் தமிழ் பாராளுமன்றமும் கூட உள்ளது.

கலை, கலாச்சாரம், கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேற்றமடைய நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அயல்நாடுகளில் நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இவ்வமைப்பின் மூலம் பலர் பயன் பெறுகின்றனர்.

இதுவரை இணையத்தில் நடைபெற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜ்யசபா உறுப்பினர்கள், செனட்டர்கள், தேசிய உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள், பெரும்பான்மையான உறுப்பினர்கள் நேரடியாகவும்,இணையத்திலும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் 12 நாடுகளில் 152 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாங்கள் வசிக்கும் நாட்டில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களை கல்வி பொருளாதாரத்தில் எப்படி மேம்படுத்தலாம் எனவும், 12 நாட்டு அரசாங்கத்தின் உதவிகளை பெறவும் ராஜாங்க உறவை மேம்படுத்த இந்த உலகத் தமிழ் பாராளுமன்றம் பேருதவியாக இருக்கும் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பாளர் செல்வகுமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.