இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த தீர்மானம்

 


தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நேற்று மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை தனுஸ்கோடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கவிடாமல் தடுத்ததுடன், மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் மீன் பிடிக்கச் சென்ற படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மூன்று விசைப்படகுகளையும் அதிலிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், ரயில் மறியல் போலாட்டம் நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீன்பிடி கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் தொடர்ந்து தமிழக மீன்பிடி படகுகளையும் தமிழக மீனவர்களையும் கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.