12 வயதுச் சிறுமி பொலிஸில் தஞ்சம்!!

 


யாழ்ப்பாணம், அவரங்கால் பகுதியில் வசிக்கும்   சிறுமியொருவர்  வீட்டில் வாழ முடியவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


12 வயதுச் சிறுமி ஒருவரே  இவ்வாறு பாடசாலைச் சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். .


தனது தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் தினமும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்த குறித்த சிறுமி தந்தையின் சித்திரவதையைப் பொறுக்கமுடியாமலே  காவல்நிலையத்தை நாடி வந்ததாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 


அச்சுவேலி காவல்துறையினர்,  சிறுமியை கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.


இச் சிறுமி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் அவருக்கு இரண்டு சகோதரர்கள் இருப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.