ஆப்கானுக்கெதிராக வென்றது பங்களாதேஷ் அணி!!


ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லிடொன் தாஸ் 60 ஓட்டங்களையும் அபீப் ஹொசைன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஃபசல்ஹக் பாரூக்கி மற்றும் அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரஷித்கான் மற்றும் குய்ஸ் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 156 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 94 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜிபுல்லா சத்ரான் 27 ஓட்டங்களையும் அஸ்மத்துல்லா உமர்சாய் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நசும் அஹமட் 4 விக்கெட்டுகளையும் சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நசும் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.