பாடசாலைக்கே வந்தது எரிவாயு!!


 வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக குறித்த பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரின் கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் இன்று பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆசியர்களின் சிரமம் உணர்ந்து நடவடிக்கை எடுத்த பாடசாலை அதிபருக்கும் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.