மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சை நிறுத்தம்!!


 மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மயக்க மருந்துக்குப் பிறகு மீண்டும் சுயநினைவு பெற பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மைன் என்ற மருந்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான கடனுதவி கடிதங்களை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படாமையே மருந்து தட்டுப்பாடு பிரச்சினைக்கு காரணம் என அரச மருந்தாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.