வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!


டக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக உருமாறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மியன்மார் கடற்கரைப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) கரையைக் கடக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் தீவு பகுதியில் இருந்து விலகி மியான்மர் கடற்கரைப் பகுதியில் இன்று கரையைக் கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.