விரைவில் மாகாண சபைத்தேர்தல்!!

 


கூடிய விரைவில் மாகாண சபைத் நடக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர்  அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது ''மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்குமா?' - என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,


''ஆம். நடக்கும். கூடிய விரைவில் நடக்கும். எந்த முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென விரைவில் தீர்மானிக்கப்படும்" - என்றார்.


இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கின்றது எனவும் இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.


உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், சுற்றுலாப் பயணிகள் வருகை, இலங்கையின் ஏற்றுமதி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.