இலங்கையில் தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி!!


 கொவிட் வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தி வைரஸைக் கொல்லக்கூடிய விசேட இரசாயனங்கள் பயன்படுத்தி   தயாரிக்கப்பட்ட விசேட தொப்பி ஒன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.


கொவிட் தொற்று மாத்திரமின்றி ஆபத்தை ஏற்படும் எந்த வகையான வைரஸில் இருந்தும்  இந்த தொப்பி பாதுகாப்பு தரும் எனவும் இதனை அணிந்து அலுவலகத்திற்குச் சென்று மேசை மீது வைத்து விட்டாலும் வைரஸ் நெருங்க முடியாதெனவும்  அவர் தெரிவித்துள்ளார்.


விரைவில் இதனை சந்தைக்கு விநியோகிக்க மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சனத் ஹெட்டிகே மேலும் தெரிவித்துள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.