யாழில் எரிவாயு நிறுவனத்தில் காத்திருக்கும் மக்கள்!

 


சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு கொள்கலன் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் எரிவாயு கொள்கலன்களை பெற்றுக்கொள்வதற்கான காத்திருந்ததுடன் அப்பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.


இதேவேளை கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை காரியாலயம் ஒன்றின் முன் இன்று அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவதற்காக கூடியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.இந்நிலையில் இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு உள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிவாயுவைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீணட வரிசையில் காத்திருப்பதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிகின்றது.(

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.