தலவாக்கலையிலும் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தப் போராட்டம்!!

 


தலவாக்கலை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில்  நேற்று (05.03) இரவு 7 மணிக்கு  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கி வருவதைச் சுட்டிக் காட்டியும் உரிய தீர்வினைப் பெற்றுத்தருமாறு கோரியும் இப்போராட்டம் நடாத்தப்பட்டது.



அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மக்களின் வாழ்வாதாரம் படும் மோசம், உரம் இல்லாததால் தேயிலைப் பயிர்ச் செய்கை பாதிப்பு, 24 நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத அரசாங்கம் வீட்டுக்கு போ, எரிபொருள் தட்டுப்பாடு மக்கள் நீண்ட வரிசையில் என அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.