5 கோரிக்கைகளை போராட்டகாரர்கள் முன் வைத்தனர்!

 


காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் பிரதமர் என்ற ரீதியில் சத்தித்து கலந்துரையாடத் தயாராகவிருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், போராட்டகாரர்கள் 5 கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

அந்த வகையில்:-

01. அரச தலைவரும்  பிரதமரும் பதவி விலக வேண்டும்.

02. ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.

03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம், கல்வி போன்றவை) மறுசீரமைப்பதற்காக 19வது திருத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி 6 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.

04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும், செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

05.06 மாதங்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலையும் அரச தலைவருக்கான தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.