பொ.கஜேந்திரகுமார் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்!

 


ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராச கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.


இன்று காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இவர்கள் ஆதரவாக கையொப்பம் இட்டுள்ளனர்.


இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதிதுப்படுத்தி சிரேஷ்ட பிரதித் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கலந்து கொண்டார்.


இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கையொப்பமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.