யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்


யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை தோண்டி எடுப்பதற்கான பணி நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்ற பின்னர் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் கூறினர்.
அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடைகம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தப் பெண்ணை அடித்துக் கொலை செய்து புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
காசுக் கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருப்பது ஆரம்ப விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.