ரணில் - கோட்டா பிரத்தியேக சந்திப்பு!!

 


நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மாத்திரமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும்   ​​சர்வதேச நாணய நிதியத்திற்கான விஜயம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஜனாதிபதி விரிவாக விபரங்களை கேட்டறிந்துள்ளதுடன் ஜப்பான், தென்கொரியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் ஐந்து முக்கிய நாடுகளால் அமைக்கப்படவுள்ள உத்தேச குழுக்கள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோத்தபாய ராஜபக்ச நீண்ட நேரம் கேட்டறிந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.