உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் கிரிக்கெட் வீரர்!


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொழும்பு காலி முகத்திடலில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை தேவாலயத்திற்கு எதிர்ப்பு பேரணி ஒன்றையும் இவர் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.