புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் பெண்!!

 


இந்தியாவின் நாற்கர சாலையை ஒடியே கடந்து  இரண்டாவது கின்னஸ் சாதனை  படைத்திருக்கிறார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்த இளம் தடகள வீராங்கனை சுஃபியா கான்.


தடகளப் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு  சிறு  வயது முதல்  விளையாட்டில் பல சாதனைகளைப் படைத்துவரும் இவர் தடகளப் போட்டியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை எனும் நான்கு பெரும் நகரங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலையை கடந்திருக்கிறார்.


இதற்காக 6,002 கிலோ மீட்டர் தூரத்தை  110 நாட்கள், 23 மணிநேரம் 24 நிமிடங்கள் ஒடி முடித்திருக்கிறார்  சுஃபியா.  இவரது புதிய முயற்சி,  கின்னஸ் சாதனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு இரண்டாவது முறை அவர் கின்னஸ் சாதனை படைத்திருப்பது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.