வைத்தியசாலையில் தேடுவாரற்று கிடக்கும் இரு சடலங்கள்!


யாழ். போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் ஆண்கள் இருவரது சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

16.02.2022 அன்று யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தலைமன்னாரைச் சேர்ந்த மணிவேல் (64 வயது) என்பவரது சடலமும் 16.03.2022 அன்று பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அண்மையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலமுமே இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையில் உள்ளது.

இரு சடலங்களும் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உரியவர்கள் அந்த சடலங்களை அடையாளப்படுத்தி சடலங்களை விரைவில் பொறுப்பேற்கும்படி யாழ்ப்பாணப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.