புலனாய்வாளர்களால் கிழக்கு ஊடகவியலாளர்கள் தேடல்!!

 


மட்டக்களப்பு மாவட்ட  சுயாதீன ஊடகவியலாளர்களான தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு துறை அதிகாரிகள் சிலர் புகைப்படங்களுடன் தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. '


அரசிற்கெதிராக நடைபெறும் போராட்டத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்புவதாகவும் சமூக ஊடகங்களில் பிரிவினைவாதத்தை தூண்டி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் கொடுக்க முனைவதாகவுமே  செ.நிலாந்தன் மற்றும் பு.சசிகரன் ஆகிய இருவரின்மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 


 தென்னிலங்கை ஊடகவியலாளர்கள்  சுயாதீனமாகச் செயற்பட தமிழ் ஊடகவியலாளர்கள் மீது வக்கிரத்துடன் செயற்படுவது பொலீசார் மற்றும் நீதித்துறை மீதான சுயாதீனத்தை இல்லாமல் செய்துள்ளதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.