அண்ணனுக்கு தம்பியால் ஆப்பு!!

 


கோட்டா கோ கோம் போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் காலி முகத்திடலில் இருக்கின்ற போராட்டக்காரர்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட இலங்கையினுடைய 10 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர்.

இந்த 10 தொழிற்சங்கங்களும் இலங்கையில் அன்றாட செயற்பாடுகளை அசைத்து பார்க்கமுடியுமான தொழிற்சங்கங்கள். இதேவேளை மேலும் 10 தொழிற்சங்கங்கள் இதனோடு இணைந்திருக்கின்றன.

, இலங்கை புகையிரத சேவையாளர்கள் சங்கம், மின்சார பொறியாளர்கள் சங்கம், துறைமுக சேவையாளர்கள் சங்கம், அத்தியாவசிய சேவையாளர்கள் சங்கம் என பல சங்கங்கள் இதில் இணைந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்த தொழிற்சங்கங்கள் தான் தற்போது எதிராக



அரசாங்கங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக முன்வந்திருப்பதுதான் அரசாங்கத்திற்கு மிக பெரிய பேரிடியாக அமைந்துள்ளது.

இதேவேளை எந்த இடைக்கால அரசாங்கம் வந்தாலும் நான் மட்டுமே பிரதமராக இருப்பேன் என மஹிந்த ராஜபக்ஷ அண்மைய நாட்களில் தெரிவித்த கருத்தாக இருந்து வருகின்றது.

பிரதமர் பதவியில் இருந்து அரசாங்கம் என்னை விலக்கினாலே தவிர நானே விலக மட்டேன் என்ற தகவலையும் மஹிந்த வெளியிட்டிருந்தார்.       

அப்படி என்றால் ஜானதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பவதற்காக முயற்சிக்கிறாரா என்ற கேள்வியும் இதற்குள் எழுந்துள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையே முறுகல் நிலை அதிகரித்து இருப்பதாகவே அனேகமான செய்தி தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனவே ஜனாதிபதியினால் பிரதமரின் பதவி பறிக்கப்படுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

மேலும் மக்களுடைய போராட்டங்கள், தொழிற்சங்களுடைய அடையாள வேலை நிறுத்த போராட்டங்கள் மற்றும் இடைக்கால அரசாங்கம் ஒன்றுக்கான முஸ்திபு இவைகள் இந்த நாட்டினுடைய சமநிலையை உடைத்திருக்கிறாது. இலங்கையில் தற்போது ஒரு உறுதியான அரசாங்கம் இருக்கிறதா என்பது இப்போது கேள்வி குறியாக இருக்கிறது.   

இப்படியான அரசியல் நெருக்கடியில் இருக்கும் போது சர்வதேச நாணய நிதியமாக இருக்கலாம், ஏனைய அமைப்புகளாக இருக்கலாம் இலங்கை தொடர்பில் உதவிகளை மேற்கொள்வதற்கு முன்வருமா என்பது மிக பெரிய கேள்வி குறி.

இலங்கைக்கு உதவிகளை வழங்குவோம் என சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டிருந்தது. இந்த உதவியின் மூலம் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளெழுந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றே நிபுணர்கள் அறிவித்திருந்தார்கள்.

அந்த அறிவிப்புகள் அப்படி இருந்தால் கூட இலங்கை IMF ஐ நாடியமை, IMF இருந்து உதவிகளை பெற்றுக்கொண்டமை எங்களுடைய கடன் சலுகையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தகூடும் என்று சீனாவின் தூதுவரும் சீனாவும் தீடிரென அறிவித்திருக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.