ரகசிய டீல் பேசும் அமைச்சர்கள்!
நாட்டில் முக்கிய அமைச்சர்கள் இரவு நேரங்களில் ரகசிய டீல் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னணி சபையின் சுயேச்சை உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக இரவு நேரங்களில் எம்.பி.க்களின் வீடுகளுக்குச் சென்று பேரம் பேசுகிறார்கள். அமைச்சுப் பதவிகளை வீட்டுப் பொருட்களாகவே கருதுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைச்சு கிடைக்கின்றது எனவும் தெரிவித்தார்.
அவர்கள் தூக்கி எறியும் எலும்புக்கு வேலை செய்யும் கொள்கை நம்மிடம் இல்லை. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் முற்றாக பதவி விலகினால் அடுத்த அரசாங்கத்தை பெற்றுக்கொள்வதில் நாம் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என விமல் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை