சாணக்கியனின் பதாகையால் சர்ச்சை!!

 


"புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்  சாணக்கியனின் பதாகை ஒன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என உரிமை கோரப்பட்ட இந்த விடயம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்  தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி முறைப்பாடு செய்துள்ளது.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் இன்றைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு எனவும்  இந்த கீழ்த்தரமான செயலுக்கும்   வாலிபர் முன்னனிக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 


முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் மற்றும் உப தலைவர், சாணக்கியனின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் ஆகியோர் அருகில் இருந்ததாக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.