வரையறுக்கப்பட்ட எரிபொருள் வழங்கல்!!
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் வழங்கப்படுமென்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி,
மோட்டார் சைக்கிள்கள் 1000/=
முச்சக்கர வண்டிகள் 1500/=
கார்கள், வான்கள், ஜீப்புகள் என்பவற்றிற்கு, 5000/= ரூபாவிற்குமே எரிபொருள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை