தமிழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

 


இலங்கையின் நிலைமை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில்,நாளை என்ன நடக்குமோ என்று யாருக்கும் தெரியாது. எனவே தமிழ் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.


தற்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுடன்,ஆனால் சிங்கள மக்களுடன் சேர்ந்து பயணிக்க கூடிய சூழல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


அதாவது தமிழ் மக்களின் போராட்டமாக இருப்பின் இராணுவம்,பொலிஸாரின் நடவடிக்கை இன்னும் தீவிரமாக காணப்பட்டிருக்கும்,அவர்கள் மீதான தாக்குதல் அதிகமாக இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினை எனில் துப்பாக்கி பிரயோகம் மேலும் அதிகரித்திருக்கும்,பயம் காணப்பட்டிருக்காது.சிங்கள மக்களின் போராட்டம் என்பதனால் கொஞ்சம் பக்குவம் காணப்பட்டிருக்கும்.


எனவே தமிழ் மக்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.போராட்டங்களை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டும் என்பதுடன் சிங்கள மக்களுடன் சேர்ந்து பயணிக்க கூடிய சூழல் இல்லை,காரணம் சிங்கள மக்கள் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colimbo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.