தமிழர்தாயகத்தில் தற்சார்பு பொருளாதாரம் ஊக்குவிப்பு!📸

 

தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமையினை கருத்தில் கொண்டு தென் தமிழீழ தேசமான மட்டக்களப்பில் வாழும் எமது தமிழ் உறவுகளுக்கு டென்மார்க் நாட்டில் வாழும் எமது தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையில் தமிழ் மக்களின் பொருளாதரத்தை உயர்த்தும் முகமாக விவசாயத்திட்டத்தை ஊக்குவித்திருக்கின்றார்கள். 2022/05/08 


 2022 /05/16 ஆகிய தினங்களில் சுமார் 30 குடும்பங்களுக்கு அவர்களது பட்டினி சாவை நிவர்த்தி செய்யும் முகமாக விவசாய ஊக்குவிப்பு திட்டம் செய்யப்பட்டது. 


இதில் சுரக்காய், மிளகாய் ,  கத்தரி , மரவள்ளி, பாகல், வெண்டி  பயற்றை ,கீரை , பீர்க்கு, புடோல் ஆகிய 10 வகையான நாற்றுக்களும் விதைகளும் வளங்கப்பட்டன. இவ்வுதவியினைப் பெற்ற மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் டென்மார்க் வாழ் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.