கிளி. பளையில் மர்மப்பொருள் வெடித்ததில் மாணவி படுகாயம்!

 


கிளிநொச்சி – பளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் மாணவி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.


பளை, கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் காயமடைந்த மாணவிக்கு 16 வயது எனவும், இன்று சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் மாணவியின் கால் பாதம் துண்டாகிப் படுகாயம் அடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன,


சம்பவத்தில் காயமடைந்த மாணவி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.