நிதானமாக விளையாடும் இலங்கை!


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 365 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் அதிகபட்சமாக Mushfiqur Rahim ஆட்டமிழப்பின்றி 175 ஓட்டங்களையும், Litton Das 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்காக துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ள இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 05 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்றைய நாள் ஆட்டமானது சில மணித்தியாலங்கள் மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.