மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!


வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பௌதீக மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறைப்பாடு செய்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டுமென குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அந்த உறுப்பினர்களிடம் இந்த வாரமும் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.