வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் யாழில் திருட்டு!!

  


யாழில் பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பணமும் திருட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த குடும்பத்தினர் பிரித்தானியாவிலிருந்து நேற்றைய தினம் வந்து ஒரு சில மணிநேரங்களுக்குள் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

உரும்பிராய் - தெற்கு பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது ஒரு பவுன் காப்பு, ஒன்றரை பவுன் சங்கிலி, ஒன்றரை பவுன் தோடு ஒரு சோடி, மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருட்டு போயுள்ளது. 

மகன் கடைக்கு சென்ற நேரம் பார்த்து தாய் பக்கத்து வீட்டுக்கு சென்ற நிலையில் திருடர்கள் துணிகரமாக நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.