‘டி’ நிலைக்குத் தரமிறங்கியது இலங்கை!


சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செய்யத்தவறியமையால் ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையைக் கடன்களை மீளச்செலுத்தமுடியாத ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் இலங்கையை ‘சி’ நிலைக்குத் தரமிறக்கியிருந்துது.

இந்நிலையில் தற்போது நாட்டை ‘சி’ நிலையிலிருந்து ‘டி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வெளிநாட்டு கொடுப்பனவு மீளச் செலுத்தப்படாமையே அதற்குக் காரணம் என்றும் விளக்கமளித்துளளது.

அதேவேளை நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டியங்கும் மற்றுமொரு பிரபல கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரப்படுத்தல் நிறுவனம் கடந்த 19 ஆம் திகதி இலங்கையின் கடன் மீள்செலுத்துகை ஆற்றல் தொடர்பாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.