சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்!


இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து, பயணம் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கோரியுள்ளார்.


இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது.


இந்த விபத்துக்களில் சைக்கிளை செலுத்திய 96 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதனால், கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் வீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நிஹால் தல்துவ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.