எரிபொருளுக்கு அதிரடி முடிவு!!

 


நாளை (28) முதல் அடுத்த மாதம் (10) வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


இக்காலப்பகுதியில் ஏனையோருக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது.


எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.