3 மில்லியன் மக்களுக்கு அவசர உதவி!!

 


நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், உலக உணவுத்திட்டம்,  இலங்கையில் அவசர உணவு உதவி தேவைப்படும் 3 மில்லியன் மக்களுக்கு அவசியமான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.


அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக கடந்த திங்கட்கிழமை அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்தது.


நீண்டகாலமாக நல்லுறவைப்பேணவரும் நாடு என்ற ரீதியில் இலங்கை மக்களுக்கு உதவுவதுடன் மாத்திரமன்றி, இந்தப் பொருளாதார நெருக்கடி தொடரும்பட்சத்தில் இப்பிராந்தியம் பாரிய பின்விளைவுகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்பதாலும் இந்த உதவியை வழங்குவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.