லொறி உடைந்ததில் மாணவர்கள் பாதிப்பு!!

 


போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது லொறியின் பின் பகுதி இடிந்து விழுந்தமையால்  விபத்து இடம்பெற்று  13 பாடசாலை மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்போது லொறியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரதேசவாசிகள் காயமடைந்த மாணவர்களை கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்தின்போது மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக கலேன்பிதுனுவெவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேன்பிதுனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.