மனைவியை கட்டி வைத்து தாக்கிய கணவர்!


இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய வழக்கில் கணவர் உள்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது நண்பனுடன் மனைவியை கண்ட கணவர் அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில் அவரது நண்பனையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித்துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.