பஸ்ஸை தீயிட்டு கொளுத்திய மக்கள்!


புஸல்லாவை, காச்சாமலை – வீடன் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ள நிலையில் விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ஸை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

புஸ்ஸலாவ, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே, வீடன் பகுதியில் வைத்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ‘புட்போட்’டில் பயணித்த இருவரே, பஸ் மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசிக்கும் சுரேன்ஜித் புஷ்பகுமார் (39 வயது) மற்றும் ஹெல்போட 7ம் கட்டை தோட்டத்தில் வசிக்கும் விஜயகுமார் கவிஷ்கர் (20 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த பஸ்ஸில் சுமார் 80 பேர் வரை பயணித்துள்ளனர், அதிகளவான பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அதேவேளை பலர் புட்போட்டிலும் தொங்கிக்கொண்டு பயணித்துள்ளனர்.

விபத்தில் சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுவப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.