புலிகளின் தலைவர் சிறந்தவர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் கொந்தளிப்பு!!

 


புலிகள் அமைப்பை தாம் மதிப்பதாகவும் , விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்தவர் என காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பிரதேசத்தை கைப்பற்றியபின்னர், போராட்டகாரர்கள் இதனை கூறியுள்ளனர்.

அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் இல்லை எனவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் ஊடாக இராணுவத்தின் போர் குற்றம் உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சரத் பொன்சேகா கட்டளை வழங்கிய இராணுவத்தினரே சரியாக பணியாற்றியதாக தெரிவித்த அவர்கள் நீங்கள்(படையினர்) தாக்குதல் நடத்துவதை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

நீங்கள் இராணு உடையில் சென்றால் காரி துப்புவார்கள். உங்களை விட புலிகள் சிறந்தவர்கள் என்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை செலுத்துகிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நீங்கள் இப்படி செயற்பட்டதன் காரணமாகவே புலிகள் எங்களையும் தாக்கினர், கோபம் கொண்டதாகவும் காலிமுகத் திடல் போராட்டகாரர்கள் ஒருவர் இராணுவத்தினரை நோக்கி கூறியுள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.