தொடரை வென்றது இந்தியா!


இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றி இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றியாக அமைய, தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி வென்றது.

நொட்டிங்ஹாம் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 77 ஓட்டங்களையும் லிவிங்ஸ்டன் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்சல் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அவிஷ்கான் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 216 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சூர்யகுமார் யாதவ் 117 ஓட்டங்களையும் ஸ்ரேயஸ் ஐயர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரீஸ் டொப்லே 3 விக்கெட்டுகளையும் டேவிட் வில்லே மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரிச்சட் கிலீசன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரீஸ் டொப்லே தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக புவனேஸ்வர்குமார் தெரிவுசெய்யப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.