ஜனாதிபதி வெளியேறுவதே தீர்வு - ஜே.வி.பி!!

 


ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை வெளியேற்றி நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜே.வி.பி யின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேறு வழியில்லை. மற்ற நாடுகளில் இதுபோன்ற நெருக்கடியின் போது பதவிகளை துறக்கும் அளவுக்கு தலைவர்கள் செயற்படுகின்றார்கள். ஆனால் மக்களின் உயிரை பணயம் வைத்தும் தங்கள் பதவிகளில் நமது தலைவர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

எனவே அரசு பதவி விலகும் வரை மக்கள் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.

ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(08) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.