நடுவீதியில் குழந்தையுடன் சென்ற தாய் குத்திக் கொலை!!

 


 பொல்பிதிகம கொலம்பஎல பிரதேசத்தில்   தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்று இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தாய் வைத்தியசாலை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே  கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டுக் கீழே கிடந்த நிலையில், அவரது குழந்தை அருகில் காணப்பட்டதாகவும் , எனினும் குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த தாயின் சடலம் பொல்பித்திகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

 கொலையைச் செய்தார் எனக் கூறப்படும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 35 வயதான தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.