நாடு முடங்குகிறதா!!

 


இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்கிவிட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழமைக்கு கொண்டு வந்த பின்னர் நாட்டை மீண்டும் திறக்குமாறு ஹரிமகா தேசிய அமைப்பு (Harimaga National Organization)கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை நிலைநாட்ட முடியாமல் இந்த நாட்டு மக்களின் உழைப்பு, செல்வம், நேரம் என்பன எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகளில் நின்று அழிந்து வருவதாக அந்த அமைப்பின் தலைவர் நிஷாந்த குமார தசநாயக்க தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மக்கள் 200 ரூபாய்க்கு எண்ணெய் வாங்க 1500 ரூபாய் செலவழிக்க வேண்டும். இரண்டு வாரங்கள் நாட்டை மூடி வைத்தால் மக்களின் பணம் மிச்சமாகும். நீங்கள் நேரத்தை சேமிக்க முடியும். இப்படி எண்ணெய் வரிசைகளில் நிற்காமல். இரண்டே வாரத்தில் எரிபொருளை பிரித்து நாட்டை திறந்து விடுங்கள் இந்த பிரச்சனைகள் ஓரளவுக்கு தீரும்.

தற்போது நாட்டில் அரசியல் நடத்துவதற்குத் தொழிலதிபர்கள் தயாராகி வருவதைக் காணமுடிகிறது. 2025ல் அந்த நாட்டை கட்டியெழுப்பவோ, நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பவோ அவர்கள் வரவில்லை. அவர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைக்கும் என வந்துள்ளனர்.

இவர்கள் இராஜதந்திரம் மூலம் வியாபாரம் செய்து உலகின் முன் செல்ல முயற்சிக்கின்றனர். இப்படி வரும் கந்து வட்டிக்காரர்களிடம் இந்த நாட்டை ஒப்படைக்காதீர்கள், இந்த நாட்டு மக்களின் பணத்தை சுரண்டி அந்த பணத்தின் பலத்துடன் வர தயாரானவர்களை இந்த நாட்டில் அரசியல் செய்ய அனுமதிப்பது நல்லதல்ல எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.