அவசரமாக நாடு திரும்புமாறு அறிவிப்பு!!

 


இலங்கைக்கு  விஜயம் செய்துள்ள சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள நிலைமை காரணமாக பாதுகாப்பினை உத்தேசித்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. 

பிரித்தானியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அத்தியாவசிய காரணங்களை தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பயண ஆலோசனைகளைப் புதுப்பித்துள்ளதுடன், இலங்கையில் நிலவும் வன்முறைப் போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.