குவிந்து கிடக்கும் சடலங்கள்!

 


நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் குவிந்து கிடப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுகாதார பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினருக்கும் ,நீதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இனந்தெரியாத சடலங்களை அகற்ற முடியாததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை அரசாங்க மருத்துவமனை பிணவறையில் குறைந்தளவு இடமே காணப்பகின்றது. அடையாளம் தெரியாத சடலங்கள் காணப்படுவதால் ஏனைய சடலங்களை அடக்கம் செய்வதில் வைத்தியசாலை அதிகாரிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் அதற்கேற்ப தேவையான வழிகாட்டுதல்கள் குறித்து சுகாதார அமைச்சும், பொலிஸாரும் இந்த வழக்கை உடனடியாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, நீதி அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.