வெள்ளிவரை மட்டுமே காலக்கெடு!!

 


காலிமுகத்திடலில் இருக்கும் எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிஸார் காலக்கெடு விதித்துள்ளனர்.

அதனடிப்படையில், அங்கு நிறுவப்பட்டிருக்கும் கூடாரங்கள் ஓகஸ்ட் 5 வௌ்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னர் அகற்றவேண்டுமென பொலிஸார், ஒலிப்பெருக்கி ஊடாக அறிவித்துள்ளனர்.

அத்துடன் "சட்டவிரோத கட்டமைப்புகளை" அகற்ற மீதமுள்ள எதிர்ப்பாளர்களிடம் ​பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொலிஸாரின் இந்த அறிவிப்பினால் அங்கு ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் போராட்டகாரகள் அப்புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #TamilNadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.